Tuesday, June 11, 2013

கூகிள் க்ரோம் புக்


முகில் கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.

முகில் கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS) கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும் லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும் இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.

கூகுள் CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங் மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம் இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..

No comments:

Post a Comment